அதிமுக கூட்டணி கூட்டுப் போராட்டம்-சிபிஎம், சிபிஐ ஆலோசனை
சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அதிமுக போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளதையடுத்து, இதுதொடர்பாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினர்.
இரு தினங்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
அப்போது மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து கூட்டணி கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்துவது என்று முடிவானது.
இது குறித்து ராமகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின்போது இரு கட்சிகளின் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
வீட்டுமனை பட்டா, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, தொழிலாளர்கள் பிரச்சனை, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவல் ஆகிய விஷயங்களில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications