சென்னையில் கோவில்கள், மசூதிகளுக்கு பலத்த பாதுகாப்பு: கண்டன போஸ்டருக்கு தடை

பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள், கோவில்கள், மசூதிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை மசூதிகள் உள்பட நகரின் பல கோவில்கள், மசூதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல சென்ட்ரல், எழும்பூர் உள்பட அனைத்து ரயில் நிலையங்களுக்கும், கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், பஸ் டெப்போக்கள், திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பபட்டுள்ளது.
இது குறி்த்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையில், அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் அழைத்து பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
சென்னை நகரில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். போலீஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள், மசூதிகள், பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், பஸ், ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
தீர்ப்பு தொடர்பாக கண்டன போஸ்டர்கள் அச்சடிக்கவும், போஸ்டர் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அச்சக உரிமையாளர்களை அழைத்து இது தொடர்பாக அறிவுறுத்திவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications