தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் கடலோர ஆந்திரத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வங்க கடலில் காற்றழுத்த சுழற்சி நீடிப்பதால் இன்று தொடங்கும் மழை அடுத்த 48 மணி நேரத்துக்கு நீடிக்கலாம் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
சென்னை மாநகரில் இன்று பகல் மற்றும் இரவு நல்ல மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இன்று காலை வெயிலுடன் கூடிய மழை பெய்தபடி இருந்தது. வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி போன்ற வடமாவட்டங்களிலும் இன்று ஓரளவு மழை பெய்தது.












Click it and Unblock the Notifications