தேனி: தங்கபாலு கூட்டத்தில் ப.சிதம்பரம் ஆதரவாளருக்கு அடி-உதை
தேனி: தேனியில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளருக்கு அடி உதை விழுந்தது.
தேனி மாவட்ட காங்கிரஸ், நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. பெரியகுளம் எம்பி ஆருண் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த தங்கபாலுவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள், வைக்கப்பட்ட பேனர்களில் பல காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தாலும் ப.சிதம்பரத்தின் படம் இடம் பெறவில்லை.
இந்நிலையில் கூட்டம் தொடங்கியதும் கம்பம் ஒன்றிய காங்கிரஸ் தலைவரும் சிதம்பரம் ஆதரவாளருமான பால்பாண்டியன், மேடையில் ஏறி வந்து தங்கபாலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அழைப்பிதழ், வரவேற்பு போஸ்டர்கள், பேனர்களில் ஏன் சிதம்பரத்தின் படம் இடம் பெறவில்லை என்று கோபமாகக் கேட்ட அவரை தங்கபாலு சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனாலம் பால்பாண்டியன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் அவரை மேடையைவிட்டு இறக்க சிலர் முயன்றனர். தங்கபாலுவும் அவரை கீழே இறங்கச் சென்னார்.
ஆனால், பால்பாண்டியன் அடங்கவில்லை. தொடர்த்து கத்தி கூச்சல் போடவே அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் கீழே தள்ளிவிட்டு தொண்டர்களோடு சேர்ந்து அடித்து, உதைத்தனர்.
சிலர் அவர் மீது ஏறி மிதித்தனர். இதில் பால்பாண்டியனின் சட்டை, வேட்டி கிழிந்தது. இதையடுத்து அவர் நிலை குலைந்த நிலையில் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.












Click it and Unblock the Notifications