For Daily Alerts
Just In
இஸ்லாமிய நெறிமுறைப்படி மசூதியைக் கட்டவில்லை பாபர்-நீதிபதி டி.வி.சர்மா
அயோத்தி தீர்ப்பை அளித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் சர்மா. இவர் இன்றுடன் பதவியிலிருந்து விடைபெறுகிறார். கடைசியாக அவர் அளித்த தீர்ப்புதான் அயோத்தி வழக்கு.
நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளவற்றிலிருந்து சில...
சர்ச்சைக்குரிய இடம் முழுமையுமே ராமர் பிறந்த இடம்தான் என்பதை ஏற்கிறேன். அந்த இடம் முழுவதும் இறைமை முழுமையாக இருக்கிறது என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த வடிவில்தான் அந்த இறைமை இருக்க வேண்டும் என்பதில்லை. எந்தவிதமான உருவமும் இல்லாத நிலையில் கூட அந்த இறைமை இருக்கலாம் என்பதையும் ஏற்கிறேன்.
பாபர் கட்டிய மசூதிதான் சம்பந்தப்பட்ட மசூதி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இஸ்லாமிய நெறிமுறைப்படி அதைக் கட்டவில்லை. எனவே அதை மசூதி என்று கூற முடியாது. மசூதிக்கான இலக்கணம் அங்கு இல்லை என்று கூறியுள்ளார் சர்மா.
Comments
Story first published: Friday, October 1, 2010, 15:22 [IST]