திருப்பூரில் தற்கொலையை தடுக்க புத்துயிர் அமைப்பு: மாவட்ட நிர்வாகம்

தொழில் நகரமான திருப்பூருக்கு வேலைவாய்ப்பு தேடி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.
இவர்களில் பலர் தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் உள்ள நபர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து உள்ளது.
இது போன்ற செயலில் ஈடுபடுவோரை தடுத்து மறுவாழ்வு அளிக்க மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து புத்துயிர் என்ற அமைப்பை துவக்கியுள்ளது.
இந்த அமைப்பில் ஒரு மன நல மருத்துவர், இரண்டு மருத்துவர்கள், இரண்டு சமூக நல ஆலோசகர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
இக்குழுவினர் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர், தனியாக தங்கி பணிபுரியும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரிடத்தில் தற்கொலை விழிப்புணர்வு குறித்து கவுன்சிலிங் நடத்துவர்.
இது போன்ற திட்டம் மதுரை மாநகராட்சியில் தற்போது அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலும் இது போல ஒரு அமைப்பை அமைத்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் தலைநகரம் சென்னை தற்கொலை நகரமாக மாறி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.












Click it and Unblock the Notifications