கூட்டணி: தொண்டர்களிடம் பாமக கருத்துக் கேட்பு!
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று பாமகவினரிடம் கருத்து கேட்டு வருவதாக அக் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் 155 வார்டுகளின் பாமக நிர்வாகிகளுடன் மூர்த்தி ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக தனக்கு செல்வாக்கு உள்ளதாகக் கருதும் சைதாப்பேட்டை, ஆர்.கே.நகர் விருகம்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் உள்ள 75 வார்டுகளை தேர்வு செய்து பாமக ஆய்வு செய்து வருகிறது.
இது குறித்து மூர்த்தி கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு எங்கள் கட்சியினரை தயார்படுத்தி வருகிறோம். வார்டு வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறோம்.
கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை, சமூக வாரியாக வாக்காளர் எண்ணிக்கை, கட்சியின் செல்வாக்கு உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.
தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து கேட்டு வருகிறோம். தொடர்ந்து ஒருவாரம் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications