மாணவன் தற்கொலை: கொல்கத்தா பள்ளி முதல்வர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள லா மேர்ட்டினியர் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவன் ருவான்ஜித் ராலா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் சுர்னிமால் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.
முதல்வர் அடித்ததால் அவமானமடைந்து ராலா கடந்த பிப்ரவரி 12ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தியது. அதன் அறிக்கையில் மாணவர் தற்கொலையில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்குள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது.
இந் நிலையில், இன்று காலை லா மேர்ட்டினியர் பள்ளியின் முதல்வர் மற்றும் கார்னியன், பர்தோ தத்தா, டேவிட் ரான் ஆகிய 3 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications