For Daily Alerts
Just In
பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீடு முன்பு முற்றுகை-25 சிவசேனாவினர் கைது
புனே: நடிகர் சல்மான் கான் தொகுத்து அளிக்கும் பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோ நடைபெறும் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 25 சிவசேனாவினரை போலீஸார் கைது செய்தனர்.
புனே லோனாவாலா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில்தான் பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. 2 மாதங்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை வீணா மாலிக், டாக் ஷோ காம்பயர் பேகம் நவாஜிஸ் அலி ஆகியோர் பங்கு பெறுவதற்கு சிவசேனாவும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று அந்த பங்களாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து 25 சிவசேனாவினரைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். அந்த பங்களாவுக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, October 5, 2010, 17:36 [IST]