நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை - அருவிகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விளைந்த நெற்கதிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குற்றாலம், ஐந்தருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, காரையாறு, கடனாநதி, அடவிநயினார் உள்ளிட்ட நீர்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications