ஜெ.வைத் தொடர்ந்து கருணாநிதிக்கும் கொலை மிரட்டல்-இமெயில் மூலம் வந்தது

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மதுரை வந்தால் கொடூரமாகக் கொல்லப்படுவார் என்று மிரட்டி சரமாரியாக மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இதுவரை 10 கடிதங்கள் வரை வந்துள்ளது. அனைத்தையும் கிண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை அதிமுக கோரிக்கைப்படி சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில்,நேற்று முதல்வர் கருணாநிதிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் 1.37 மணியளவில் கருணாநிதியின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு இ-மெயில்மூலம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அதில், எங்கள் தலைவி ஜெயலலிதா அம்மாவோடு நீ மோதுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் நீ உயிருடன் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீ வெளியில் செல்லும் சமயம் உன்னை கொலை செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்த எங்களது 3 ஆட்கள் உன்னுடனேயே இருக்கிறார்கள். நீ செல்லும் காரில் வெடிகுண்டு வைக்க உள்ளோம். இந்த தகவல் உறுதியான தகவல் என்று கூறப்பட்டிருந்ததாம்.
அதில் பெயர் விவரம் உள்ளிட்ட எதுவும் இல்லை.
இதுகுறித்து சென்னைமத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications