சோனியா கூட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஈவிகேஎஸ்!!
திருச்சி: சோனியா காந்தி பங்கேற்ற திருச்சி காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பேசக் கூட வாய்ப்பு தராததால் அவரது ஆதரவாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
இப்படியெல்லாம் நடக்கும்போது, பொதுவாக பழியை இன்னொரு கோஷ்டிமீது போட்டே பழக்கமான காங்கிரஸார் இந்த முறை, அந்த கோஷ்டியோடு திமுகவையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். திமுகவினரின் வற்புறுத்தலால்தான் இளங்கோவனுக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று புலம்புகின்றனர்.
'ஆட்சியில் காங்கிரசுக்கும் பங்கு, இல்லையேல் கூட்டணியில் மாற்றம்' என்று ஆக்ரோஷமாகப் பேசி வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். திமுக அரசை விமர்சிப்பதில் அதிமுகவுக்கு இணையாகத் திகழ்கிறார் என்று காங்கிரஸ்காரர்களே கூறுமளவுக்கு அவர் இந்த விஷயத்தில் வேகம் காட்டி வருகிறார்.
இதற்கு, காங்கிரஸ் தொண்டர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இளங்கோவனின் பேச்சை மாநிலத் தலைவர் தங்கபாலு உட்பட எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற, கட்சியின் 125ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் கடந்த சனியன்று திருச்சியில் நடந்தது. பல சர்ச்சையை கடந்து திட்டமிட்டபடி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணத்துக்காக, 6 பேர் மட்டுமே உட்காருவது போல மேடை அமைக்கப்பட்டது. மேடையில், சோனியாவுடன் இடம் பெற்ற மத்தியமைச்சர்கள் சிதம்பரம், வாசன், மாநிலத் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்தியமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு மட்டும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், மேடையில் இடம் கிடைத்தும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளங்கோவனுக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
இது இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த கோஷ்டியையும் சேராத, ஆனால் திமுக கூட்டணியை விரும்பாத காங்கிரஸாருக்கும் இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
திமுகவுக்கு எதிரான கருத்துக்களை நிச்சயம் இந்தக் கூட்டத்தில் இளங்கோவன் பேசுவார் என்பதை எதிர்ப்பார்த்தே, அவரை திட்டமிட்டு பேசவிடாமல் செய்துவிட்டனர் என்று குமுறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதே நேரத்தில் இளங்கோவனின் மனதைப் பிரதிபலிப்பது போல, ஆட்சியில் பங்கு, கூட்டணியில் முக்கியத்துவம் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதில் இளங்கோவன் கோஷ்டிக்கும் சற்று திருப்தியாம்!.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications