அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
மதுரை : அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
புதுக்கோட்டையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வெங்கடாச்சலம் சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை கைது செய்யக் கோரி அதிமுக-வினரும், அவரது உறவினர்களும் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் புதுக்கோட்டையில் உள்ள பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்த நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொன்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கணேசன் (28) மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி முன்னிலையில் சரணடைந்தார்.
இதனையடுத்து அவரை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும், அன்றைய தினம் புதுக்கோட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications