ராணுவம் கைது செய்த விடுதலைப்புலி தலைவர்கள் எங்கே?-மனைவிகள் புகார்

இறுதிப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு தொடர்பாக சமரச குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குறைகளை கூறி வருகின்றனர்.
இந்தக்குழு முன்பு விடுதலைப்புலிகள் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையர் மனைவி வனிதா ஆஜராகி புகார் கூறினார்.
அவர் கூறுரகையில், 2009-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி இறுதிக்கட்ட போரின்போது எனது கணவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அவருக்கு போரின்போது காயம் ஏற்பட்டு இருந்தது. காயத்துக்கு சிகிச்சை அளித்து திருப்பி அனுப்பி விடுவதாக கூறினார்கள்.
ஆனால் இதுவரை அவரை திருப்பி அனுப்பவில்லை. அவர் கதி என்ன ஆனது என்றும் தெரியவில்லை. இதே போல பலரையும் காணவில்லை, என்றார்.
அதே போல விடுதலைப்புலி தளபதிகளின் ஒருவரான பிரபாவின் மனைவி பூவிதாவும் புகார் கூறினார்.
அவர், என் கணவரை கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்தினர் கைது செய்தனர். இதுவரை அவர் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை, என்றார்.












Click it and Unblock the Notifications