2வது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட ஆளுநர் மீது காங்., கெளடா கட்சி கடும் காட்டம்

நேற்று மாலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் ஆளுநர் பரத்வாஜை நேரில் போய் பார்த்து இதுகுறித்த தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த இரு கட்சி தலைவர்களின் முகங்களும் கடும் கோபத்துடன் காணப்பட்டன.
குறிப்பாக கடும் சிரமப்பட்டு அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் வளைத்து வைத்திருந்த குமாரசாமிதான் கடும் அதிருப்தியுடன் காணப்பட்டார். அவர் கூறுகையில், 2வது நம்பிக்கை வாக்கெடுப்பை கைவிடுமாறு ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். அது முடியாவிட்டால், உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரையாவது தள்ளிப் போடுமாறும் கேட்டுக் கொண்டோம். ஆனால் அதை ஆளுநர் கேட்கவில்லை.
ஆளுநரின் இந்த வினோதமான முடிவுக்கு தடை விதிக்க கோர்ட்டை அணுகுவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு இதே ஆளுநர்தான் பரிந்துரைத்தார். பிறகு எப்படி இன்னொரு நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் அறிவிக்க முடியும் என்று தெரியவில்லை என்றார் குமாரசாமி கடுப்புடன்.
இதற்கிடையே, ஆளுநர் பரத்வாஜின் செயல்பாடுகள் அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கர்நாடகத்தில் அரசியல் சட்டம் சீர்குலைந்து விட்டது, பேராபத்தில் இருக்கிறது, இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்று கடும் வார்த்தைகளால் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய பின்னர் மெஜாரிட்டைய நிரூபியுங்கள் என்று பாஜக அரசுக்கு 2வது வாய்ப்பை அவர் அளித்துள்ளது பெரும் முரண்பாடாக உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை:
இந் நிலையில் கர்நாடக விவகாரம் குறித்து நேற்று காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று சோனியா காந்தி கர்நாடக மேலிட பார்வையாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், கர்நாடக முன்னாள் முதல்வரும் சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், பிரிதிவிராஜ் சவுகான், முகுல் வாஸ்னிக், கேசவ்ராவ் ஆகியோருடனும் சோனியா ஆலோசனை நடத்தினார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications