மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகம் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. இறங்குமுகத்தில் இருந்தது. ஆனால் அதற்கு வட்டியும் முதலையும் சேர்த்துத் தருவது போல அமைந்தது இன்றைய பங்குச் சந்தையின் போக்கு.
இன்று புதன்கிழமை ஒரே நாளில் 484 புள்ளிகள் உயர்ந்தன. குறிப்பாக நுகர்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் நல்ல விலைக்குக் கைமாறின.
இதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகளும் அதிக அளவில் வரத் துவங்தியுள்ளன. இன்றைய நிலவரப்படி வெளிநாட்டு முதலீட்டின் அளவு 1 ட்ரில்லியன் ரூபாயைத் தாண்டியது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 20704 ஆகவும், நிப்டி 6234 ஆகவும் நிலைபெற்றன.












Click it and Unblock the Notifications