For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீலகிரி அருகே சமரசம் செய்ய முன்ற திமுக பிரமுகர் படுகொலை

Google Oneindia Tamil News

நீலகிரி : இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தி.மு.க. கிளைச் செயலாளர் கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு அப்பகுதியில் 4 ஏக்கர் தேயிலை தோட்டம் உள்ளது.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற சென்னையைச் சேர்ந்த ஜெயலட்சுமியின் சகோதரர் சங்கரலிங்கம் இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி வந்துள்ளார்.

இதனால் இது தொடர்பாக நடேசன் தரப்புக்கும், சங்கரலிங்கம் தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சங்கரலிங்கத்தின் மனைவி மற்றும் இரு மகன்கள் உட்பட சிலர் தேயிலை தோட்டத்தில் இலை பறித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கும் ஜெயலட்சுமி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க. கிளைச் செயலாளர் கிருஷ்ணன் (48) மற்றும் சிலர் அங்கு சென்று இவர்களை சமரசம் செய்யதுள்ளனர்.

இதற்கிடையே ஒரு கும்பல் கிருஷ்ணனை கம்பியால் பலமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து சிகிசைக்காக அவரை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X