For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக ஆட்சியை சீர்குலைத்து ஸ்திரமற்றதாக துடிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்-எதியூரப்பா

Google Oneindia Tamil News

Yeddiyurappa
பெங்களூர்: ஆட்சியை சீர்குலைத்து, ஸ்திரமற்ற நிலைக்கு கர்நாடகத்தை தள்ளுவதே எதிர்க்கட்சியினரின் ஒரே நோக்கமாக உள்ளது. இதை இரண்டு முறை நான் முறியடித்து விட்டேன் என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா.

கர்நாடக சட்டசபையில் இன்று நடந்த 2வது நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் எதியூரப்பா. அப்போது அவர் கூறுகையில்,

ஜனநாயக முறைப்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஆட்சியின் பெரும்பான்மை பலத்தை முறைப்படி நிரூபித்து விட்டோம். இனிமேலும் எதிர்க்கட்சியினர் எங்களைக் குறை கூற முடியாது.

கடந்த ஒரு வாரத்திற்குள் 2 முறை எனது ஆட்சியின் பெரும்பான்மை பலத்தை நான் நிரூபித்துள்ளேன்.

காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து, அரசை சீ்ர்குலைத்து ஸ்திரமற்ற நிலையை உருவாக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை நான் 2 முறை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளேன்.

எனது அரசுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்று கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

இந்தியாவில் 3 நாட்களுக்குள் 2 முறை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்து வெற்றி பெற்ற அரசு கர்நாடக பாஜக அரசு மட்டுமே. அந்த வகையில் இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும் என்றார் எதியூரப்பா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X