பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமையாசிரியர் மீது வழக்கு
நெல்லை: பள்ளி ஆசிரியைக்குக் கொலை மிரட்டல் விடுத்த தலைமை ஆசிரியர் மீது வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
நெல்லை தச்சநல்லூர் பாலபாக்கிய நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் கங்கைகொண்டான் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்திலுள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவரும் கங்கைகொண்டான் இந்து பரந்தாமன் துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ள கிறிஸ்டோபரும் நேற்று வழக்கு காரணமாக நெல்லை நீதிமன்றத்திறக்கு வந்தனர். பின்னர் மகேஸ்வரி நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கிறி்ஸ்டோபர் மகேஸ்வரியிடம் நீ எப்படி இந்த வழக்கில் அப்ரூவராக மாறலாம் என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கல்லால் தாக்கி மானபங்கபடுத்த முயற்சித்தார்.
இது குறித்து நெல்லை ஜங்ஷன் போலீசார் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் மீது கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications