என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய தடை
நெய்வேலி : என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த பேராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 10,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொழிற்சங்கங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் என்.எல்.சி. சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பொதுமக்கள் சேவை தொடர்பான பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றும், சாலை மறியல் செய்யக் கூடாது என்றும் தொ.மு.ச, ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு, என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம் உள்ளிட்டத் தொழிற்சங்கங்களுக்கு இடைக் காலத் தடை விதித்துள்ளது.
நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான சமரசப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறலாம். சமரச முயற்சிக்கு 5 சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தொழிற்சங்கங்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளன. மேலும் இந்த தடையாணையை நீக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications