சபரிமலையில் காற்று புகாத பாக்கெட்டில் அப்பம் வழங்க முடிவு
புனலூர்: சபரிமலையில் இந்த சீசன முதல் காற்று புகாத பாக்கெட்டுகளில் அப்பம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தட்டுபாடின்றி அரவணை பிரசாதம் கிடைக்க கூடுதல் இயந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசாதமாக அப்பம், அரவணை வழங்கப்படுகிறது. அரவணை பிரசாதம் டின்களிலும், அப்பம் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டுகளில் வழங்கப்படும் அப்பம் விரைவில் கெட்டு விடுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் பக்தர்கள் புகார் கூறினர்.
இதையடுத்து இந்த ஆண்டு முதல் அப்பத்தை நவீன முறையில் தயாரித்து காற்று புகாத பாக்கெட்டுகளில் விற்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இதற்காக ரூ.20 லட்சம் செலவில் நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரும் மண்டல சீசன் முதல் நவீன பாக்கெட்டுகளில் அப்பம் கிடைக்கும். அரவணை பிரசாதம் தட்டுபாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சன்னிதானத்தில் மேலும் ஒரு அரவணை தயாரிப்பு இயந்திரம் அமைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications