காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் கல்மாடியைக் கேலி செய்து கூச்சல்
டெல்லி: காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் பேச சுரேஷ் கல்மாடி வந்தபோது அங்கிருந்தவர்கள் தங்கள் வெறுப்பைக் காட்டும் வகையில் கூக்குரலிட்டனர். இதை கல்மாடி சிரித்து சமாளித்தார்.
காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக பல்வேறு பிரச்சைனைகளில் சிக்கிய கல்மாடிக்கு போட்டிகள் துவக்க நாள் விழாவன்றும் இதே போன்று வரவேற்பு தான் கிடைத்தது.
60,000 பேர் அமரக்கூடிய அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் கல்மாடி பேசுவதற்காக வந்தவுடனே தங்கள் அதிருப்தியையும், வெறுப்பையும் காட்டும் வகையில் 'ஊ' என்று கூச்சலிட்டனர்.
அவர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் லலித் பனாடிற்கு நன்றி தெரிவித்தபோதும் அனைவரும் 'ஊ' என்று ஒலி எழுப்பினர்.
அவர் தன் பேச்சில் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், சோனியா காந்தி, அவர் மகன் ராகுல் காந்தி பெயர்களைக் குறிப்பிட்டதும் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவி குரிஷரன் கவுருடன் அரங்கில் நுழைந்தபோதும் அனைவரும் மகிழ்ச்சி கரகோசம் செய்தனர்.












Click it and Unblock the Notifications