தமிழர் மறுவாழ்வுக்கு செய்தது என்ன?-பிரதமரிடம் விளக்கினார் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராஜபக்சே. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று ராஜபக்சேவுக்கு விருந்தளித்துக் கெளரவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இந்த சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் ராஜபக்சே விளக்கியதாக தெரிகிறது.
சமீபத்தில் சோனியா காந்தி சென்னை வந்தபோது அவரை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து முதல்வர் கருணாநிதி மனு அளித்தார். அதில் உள்ள கோரிக்கைகள் குறித்து பிரதமர், ராஜபக்சேவிடம் வலியுறுத்தியிருக்கலாம் என்றும் தெரிகிறது.
நேற்று இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications