மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு பெயர் எடுப்பதா?-நிதீஷ் குமாருக்கு பிரதமர் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
நர்பத்கன்ச் (பீகார்): மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்தி, அதை தானே அமல்படுத்தியது போல பெயர் வாங்க முயற்சிக்கிறார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் இன்று பிரதமர் கலந்து கொண்டு பேசினார். அராரியா மாவட்டத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை முவுமையாக செயல்படுத்த தவறி விட்டது நிதீஷ் குமார் அரசு. இந்தத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் பெயரை மட்டும் தானே எடுத்துக் கொண்டு தனது திட்டங்கள் போல காட்டி வருகிறார் நிதீஷ் குமார்.

இவை மத்திய அரசின் திட்டம் என்பதை அவர் மக்களிடமிருந்து மறைத்து வருகிறார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை முறையாக அவர் அமல்படுத்தவில்லை. அதேபோல சிறுபான்மையிருக்கான மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தையும் அவர் முழுமையாக அமல்படுத்தவில்லை.

பீகாரில் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், சாலை வசதி, நீர்ப்பாசன வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்த மத்திய அரசு துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.1000 கோடி சிறப்பு நிதியையும் ஒதுக்கியுள்ளோம்.

பீகாருக்கு கடந்த 2004 முதல் இன்று வரை ரூ. 6000 கோடியைக் கொடுத்துள்ளது மத்திய அரசு. 36 மாவட்டங்களுக்கு சிறப்பு உதவிகளையும் வழங்கி வருகிறோம்.

ஆனால் இந்த நிதியை நிதீஷ் அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் பீகார் மாநிலம் இந்நேரம் அடிப்படைக் கட்டமைப்புகளில் சிறந்து விளங்கியிருக்கும் என்றார் பிரதமர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+