மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு 12 ஆண்டு சிறை-ரூ. 6,000 அபராதம்

Subscribe to Oneindia Tamil

மீரட்: வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த கொடூரச் சம்பவம் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் கொலையாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும். ரூ. 6,000 அபராதமும் விதித்துள்ளது.

பங்கஜ் (அ) குட்டு தன் மனைவி மீனாட்சியை உயிருடன் எரித்துக் கொன்றது நிரூபிக்கப்பட்டதாகக் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆர். என். பாண்டே தெரிவித்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பங்கஜ் மீது மீனாட்சியின் சகோதரர் ரூபேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வரதட்சணை கேட்டுத் தான் தனது தங்கையை பங்கஜ் எரித்துக் கொன்றுவிட்டதாக குமார் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+