இந்தியாவுக்கு பெரும் எரிச்சலாக இருப்பது பாக்., சீனா-ராணுவ தளபதி
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் ராணுவ கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், பாகிஸ்தானிலிருந்து வரும் மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தொடர்ந்து தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து ஆதரித்து வருகிறது பாகிஸ்தான். மேலும் அங்குள்ள ஆட்சியாளர்களும் நிலையற்ற நிலையில் இருக்கின்றனர். இவையெல்லாம் இந்தியாவுக்கு ஆபத்தையே விளைவிக்கும்.
மறுபக்கம் சீனா தனது ராணுவ பலத்தைக் காட்டி ஆக்கிரமிப்பின் மூலம் இந்தியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இவற்றை சமாளிக்க நமது படையினர் கவனமாக இருக்க வேணடியது அவசியம் என்றார் சிங்.












Click it and Unblock the Notifications