For Daily Alerts
Just In
இலங்கையின் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவுகிறது இந்தியா-குழு அனுப்புகிறது
டெல்லி: இலங்கையின் அறிவுசார் வள்ச்சிக்கு இந்தியா உதவுகிறது. இதற்காக ஒரு குழுவை அங்கு அனுப்பி வைக்கவுள்ளது.
இந்தியா வந்திருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலும் சந்தித்துப் பேசினர். அப்போதுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்கலைக்கழகங்கள் அளவில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. உயர் கல்வி தொடர்பாகவும் இரு நாடுகளிடையிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளனவாம்.
இலங்கையின் அறிவு சார் வளர்ச்சிக்குத் தேவையானதை அறிய விரைவில் அங்கு ஒரு உயர்மட்டக் குழு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Story first published: Saturday, October 16, 2010, 11:42 [IST]