எதிர்க்கட்சியினர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்-கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா
இதுகுறித்து ஷிமோகாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு வர வேண்டும். பாஜகவின் கொள்கை, தலைமையை ஏற்பதாக அவர்கள் தெரிவித்தால் அவர்கள் பாஜகவுக்கு தாராளமாக வரலாம்.
சில எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொலைபேசி மூலம் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். தங்களது கட்சித் தலைவர்களின் பொய்யான முகங்களால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அவர்கள் முதலில் தங்களது கட்சியை விட்டு விலக வேண்டும். பின்னர் பாஜகவுக்கு வர வேண்டும்.
கட்சியில் ஒழுங்கீனத்திற்கு இடமில்லை. இதனால்தான் பாஜகவுக்கு எதிராக திரும்பிய எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
பாஜக அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும். இனியும் ஸ்திரமின்மைக்கு இடம் தரப்பட மாட்டாது.
தற்போது ஆறு அமைச்சர் பதவி காலியாக உள்ளது. எனவே விரைவில் முதல்வர் எதியூரப்பா அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளார். இதுவரை அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றார் ஈஸ்வரப்பா.