சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு-தடை கோரி வியாபாரிகள் முதல்வரிடம் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதியிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான குழுவினர் முதல்வரைச் சந்தித்தனர். அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரண உதவி வழங்கப்படுவதைப் போல், தொழிலில் நலிவு அடையும் சிறு வியாபாரிகளுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 1 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த வரம்பை சிறு வியாபாரிகளுக்கு 300 யூனிட்டாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications