கோவையின் தங்க மகன்கள் ஓம்கர் சிங், ஹர்பிரீத் சிங்!
கோவை: கோவையைச் சேர்ந்த ஓம்கர் சிங், ஹர்பிரீத் சிங்கும் அன்மையில் புது டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் 5 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்கள் வாங்கி கோவை நகருக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
ஓம்கர் சிங் 50மீ பிஸ்டல், 100 மி ஏர் பிஸ்டல் சிங்கிள்ஸ் மற்றும் 100 மி ஏர் பிஸ்டல் டபுள்ஸ்-ல் 3 தங்கப் பதக்கங்கள் வாங்கியுள்ளார். மேலும், 50 மி ஏர் பிஸ்டல் டபுள்ஸ் பிரிவில் 1 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இதே ஊரைச் சேர்ந்த ஹர்பிரீத் சிங் 25 மீ சென்டர் பயர் பிஸ்டல் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார்.
இந்த இருவரும் கோவையில் உள்ள ஐஏஎப்-ல் பணி புரிகின்றனர். வெற்றி பெற்ற இருவரும் பயிற்ச்சியாளர் சஞ்ஜய் டட்டியுடன் நேற்று கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். மாவட்ட ஆட்சியர் பி. உமாநாத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications