For Daily Alerts
Just In
தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி பாஜக எம்.எல்.ஏவுக்கு நெஞ்சு வலி
மைசூர்: கர்நாடக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி பாஜக எம்.எல்.ஏ. சங்கரலிங்கே கெளடாவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மைசூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் கெளடாவும் ஒருவர். பாஜகவைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த 10 நாட்களாகவே நெஞ்சு வலித்து வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். இந்த நிலையில் நேற்று அவருக்கு வலி அதிகமாகவே மருத்துவ மனையில் சேர்த்தனர்.
தற்போது அவரது நிலை ஸ்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி தனக்குக் கிடைக்காததால் எதியூரப்பாவை கடுமையாக விமர்சித்து வந்தவர் கெளடா. பாஜக தலைவர்களையும் சாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, October 17, 2010, 10:11 [IST]