தங்கம் வாங்க கடன் வழங்குவது அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

கொச்சி: இது பண்டிகை காலம். மக்களின் அதிகரிக்கும் தேவை காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க மக்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவது அதிகரித்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி, தீபாவளி பண்டிகையொட்டி நாடு முழுவதும் குறிப்பாக தென்னிந்திய மக்கள் அதிகமாக ஆபரண தங்கம் மற்றும் தங்க நாணயங்களை வாங்கி குவிக்கின்றனர். அத்துடன் தங்கம் வாங்குவது பாதுகாப்பனதாகவும், கருதுகின்றனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை உச்ச நிலையில் உள்ளது. இதனால் தங்கம் வாங்க கடன் அளிக்கும் வங்கி மற்றும் தங்கத்துக்கான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை மக்கள் நாடுவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து முத்தூட் பைனாஸ் குருப்பின் நிர்வாக இயக்குனர் தாமஸ் ஜார்ஜ் கூறுகையில், "தங்கள் நிறுவனத்தின் 1200 கிளைகளில் ஜூலை-செப்டம்பர் மாதத்தில் தங்க நாணய விற்பனை 85 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மூலம் மூன்று மாதத்தில் நிறுவனம் ரூ.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 1 கிராம் முதல் 100 கிராம் நாணயம் வரை குறிப்பாக 8 கிராம் நாணயம் அதிகமாக விற்பனையானது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக வாடிக்கையாளர்கள் நலன் கருதி தவணை முறையிலும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+