26/11 தாக்குதல் பற்றி இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தோம் : அமெரிக்கா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: டேவிட் ஹெட்லியின் மூன்று மனைவிகளில் இருவர் மும்பை தாக்குதல் குறித்து முன்கூட்டியே எப்.பி.ஐ.-க்கு தகவல் தெரிவித்தனர். அமெரிக்காவும் இது வெறும் அச்சுறுத்தலாக இருந்தபோதிலும் இந்தியாவுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து எச்சரித்தது.
தாக்குதலின் நேரம், இடம் முதலியவை பற்றி முன்பே தெரிந்திருந்தால் நாங்கள் அதை கண்டிப்பாக இந்திய அரசுக்குத் தெரிவித்திருப்போம் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் மைக் ஹேம்மர் பிடிஐ-க்குத் தெரிவித்தார்.
ப்ரோ பப்ளிகா வெளியிட்ட மும்பை தாக்குதலின் விசாரணை அறிக்கை பற்றி கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications