விரைவில் உணவுக்கு உத்தரவாதச் சட்டம் : ப.சிதம்பரம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: விரைவில் உணவுக்கு உத்தரவாதச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இன்று ஊட்டியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பேசுகையில், "உணவுக்கு உத்தரவாதச் சட்டம் விரைவில் அமலுக்கு வரும். திமுக அரசு தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி நடத்துகிறது. காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை பதவியைவிட்டு விலக வேண்டும் என்று அத்வானி கூறுவதில் நியாயம் இல்லை.
மத்தியில் உள்ள உணவுத் தொகுப்பில் இருந்து மத்திய விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அரிசி, கிலோ 3 ரூபாய்க்கு வழங்கப்படும்," என்றார்.












Click it and Unblock the Notifications