2015ல் முடிவடையும் மெட்ரோ ரயில் திட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: ரூ. 14, 600 கோடி செலவில் நடந்துவரும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 2015-ம் ஆண்டு நிறைவடையும் என்று துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 45.1 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும். இதில் பூமிகடிக்கடியில் 24 கிமீ ரயில் பாதை அமைக்கப்படும்.
மக்களின் வசதி கருதி கூடுதலாக 22 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே திட்டமிட்டதைவிட கூடுதலாக 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
பயணிகள் வசதிக்காகவும், சரக்குப் போக்குவரத்திற்காகவும் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, சர்வதேச மற்றும் இரண்டாம்நிலை ஓடுதளங்களை இந்திய விமான நிலைய ஆணையம் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அமைக்கும்.
2020-ம் ஆண்டிற்குள் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 27.6 மில்லியன் டன்னையும், சரக்குப் போக்குவரத்து 10.4 லட்சம் டன்னையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.












Click it and Unblock the Notifications