தூத்துக்குடி: ஆசிரியர் அலட்சியத்தால் பார்வை இழந்த பள்ளி மாணவன்!
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே ஆசிரியரின் அலட்சியத்தால் பார்வையை இழந்தான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன்.
அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவனின் பெற்றோர் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் இந்திராநகர் கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கிட்டு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவர்களது மகன் கார்த்திக் (7).
இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கோகிலா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளி்த்தார். அதில், கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி கார்த்திக் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார். வகுப்பறையில் இருக்கும் போது உடன் பயிலும் மாணவர் ஒருவர் குச்சியால் கார்த்திக்கின் கண்ணில் குத்தியுள்ளார்.
இதை பார்த்த பிறகும் கூட வகுப்பாசிரியர் கார்த்திக்கிற்கு முதலுதவியும் அளிக்கவில்லை, பெற்றோருக்கும் தகவல் கொடுக்கவில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு தான் எங்களுக்குத் தெரியும்.
உடனே அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு இன்னும் முழுமையாக பார்வை கிடைக்கவில்லை. இது ஆசிரியர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தின் காரணமாகவே நடந்துள்ளது.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டபோது கண்பார்வை கிடைக்க ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாகக் பள்ளி நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் தற்போது இச்சம்பவத்தை அலட்சியப்படுத்தி வருகிறது.
எனவே, எனது மகனுக்கு கண்பார்வை முழுமையாக கிடைத்திட ஆகும் மருத்துவ செலவு முழுவதையும் பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும். மேலும், அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications