காஷ்மீரில் கலவரத்தைத் தூண்டியவர் கைது!

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: காஷ்மீரில் கடந்த மாதம் கலவரத்தைத் தூண்டிய தலைவரான மசாரத் ஆலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

காஷ்மீரில் 3 மாதமாக தொடர்ந்து கலவரம் நடந்து வந்தது. இதனால் நடந்த போலீஸ் சூப்பாக்கி சூட்டில் 110 பேர் கொல்லப்பட்டனர். பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான மசாரத் ஆலம் கலவரத்தை தூண்டி வந்தார். ரகசிய இடத்தில் பதுங்கி இருந்தபடி அவர் கலவரக்காரர்களை வன்முறையில் ஈடுபட செய்தார்.

அவரை 4 மாதமாக போலீசார் தேடிவந்தனர். அவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மசாரத் ஆலம் ஸ்ரீநகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மசாரத் ஆலம் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் காஷ்மீரில் அமைதி திரும்ப நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+