கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டது : மெட்ரோ சேவை நிறுத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று காலை 9.30 மணி அளவில் மெட்ரோ ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தடம் புரண்ட டம்டம் சென்ட்ரல் ஸ்டேஷன் ரயிலில் பயணம் செய்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
ரயில் பெட்டிகள் தடம் புரண்டவுடனே விளக்குகள் அனைத்தும் அணைந்ததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் பயணிகளை ஓட்டுநர் அறைக் கதவு வழியாக வெளியேற்றினர். இந்த சமபவத்தைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications