எந்தத் தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பேன்!- சோனியா மருமகன்
இவர் ப்ரியங்காவின் கணவர். சோனியா காந்தியின் மருமகன்.
41 வயதாகும் வதேரா, சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இப்படிக் கூறியுள்ளார்:
"நான் அடிப்படையில் ஒரு பிஸினஸ்மேன். நான் இருப்பது அரசியல் குடும்பம்தான். ஆனாலும் அரசியலுக்கு வருவேனா என்று தெரியாது. இந்த லைன் இன்னும் முழுசாக பிடிபடவில்லை.
ஒருவேளை இந்த லைன் (அரசியல்) எனக்கு செட்டாகும் என்ற நம்பிக்கை வந்தால் நான் அரசியலில் குதிப்பேன். என் குழந்தைகள் வளர்ந்த பிறகு, கிடைக்கும் நேரத்தை சரியாக செலவிட்டால், எல்லோருக்கும் முன்மாதிரியான ஒரு அரசியலை என்னால் தரமுடியும்.
இன்னொரு விஷயம், நான் அரசியலில் இறங்கினால், நிச்சயம் இந்தியாவின் எந்தத் தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பேன்.
என்னை கடந்த தேர்தலிலேயே சுல்தான்பூர் (உபி) தொகுதியில் நிற்குமாறு வற்புறுத்தினார்கள். இத்தனைக்கும் அது என் சொந்தத் தொகுதி கூட இல்லை. ஆனால் நான்தான் மறுத்துவிட்டேன்.
ராகுலும் நானும் உறவுக்காரர்கள் என்பதைவிட, மிகமிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் ராகுலின் அரசியலில் நான் தலையிட்டதே இல்லை..." என்றார்.