For Daily Alerts
Just In
உடல் உறுப்புகள் தானம்-எழுதிக் கொடுத்தார் ஆந்திர முதல்வர் ரோசய்யா
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ரோசய்யா மரணத்திற்குப் பின்னர் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
ஹைதராபாத்தில் நடந்த இந்திய உறுப்பு மாற்றுக் கழகத்தின் தேசிய மாநாட்டின்போது அவர் இதுதொடர்பான உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக அளித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உடல் உறுப்பு தானத்தை குறையின்றி அமல்படுத்துவதற்காக ஜீவன்தான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மாநில அரசு சிறப்பாக நிறைவேற்றும் என்றார்.
ஆந்திராவில் உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்கும் வகையிலும், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, October 22, 2010, 12:32 [IST]