ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் போல ராகுல் காந்தி-காங். தலைவர் ஒப்பீடு
டெல்லி: நாட்டின் இளைஞர்கள் குறித்து முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயணன் கவலைப்பட்டார். இப்போது ராகுல் காந்தி அந்த இடத்தை நிரப்பியுள்ளார் என்று கூறியுள்ளார் பீகார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ்.
ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தியை எதிர்த்து தீவிரமாக அரசியல் புரிந்தவர். இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சிக்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாக செயல்பட்டவர். இந்திரா காந்திக்கு எதிராக இயக்கமே நடத்தியவர். இந்த நிலையில், ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் ராகுல் காந்தியை பீகார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒப்பிட்டுப் பேசியிருப்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மோகன் பிரகாஷ் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்தி, இளைஞர்களின் நலன், தேவைகள், எதிர்காலம் குறித்து பெரும் கவலையுடனும், அக்கறையுடனும் உள்ளார்.
நேருவுக்குப் பின்னர் குழந்தைகள், மாணவர்கள் நலன் குறித்து அக்கறை காட்டியவர் அப்துல் கலாம். அதேபோல ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்குப் பிறகு நாட்டின் இளைஞர்கள் குறித்து அக்கறை காட்டி வரும் ஒரே தலைவர் ராகுல் மட்டுமே.
பீகார் தேர்தல் பிரசாரத்தில் அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை. மாறாக நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மட்டுமே பேசி வருகிறார். இது பீகார் இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பொறுக்க முடியாமல் ராகுல் காந்தி மீது எதிர்க்கட்சியினர் அவதூறாகப் பேசி வருகின்றனர் என்றார் பிரகாஷ்.
-
அமெரிக்காவுக்கு 30% அதிரடி வரி .. டிரம்புக்கு சைலன்ட்டாக பதிலடி கொடுத்த இந்தியா.. கதறும் எம்பிக்கள் -
Dhanusu Thai Matha Palan: தனுசு ராசிக்கு கொட்டி கொடுக்கும் குரு.. 30 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ் -
சிறகடிக்க ஆசை: மீனாக்கும் ரோகிணிக்கும் சரியான போட்டி! முத்துவுக்கு கிரிஷ் கொடுத்த செருப்படி! இது பலருக்கும் பாடம் -
பாண்டியன் ஸ்டோர்ஸில் பாண்டியன் எடுத்த உருப்படியான முடிவு! அதிர்ச்சியில் தங்கமயில், சூழ்ச்சி செய்த சுகன்யா -
வண்டலூரில் விழுந்த சூப்பர் சர்ப்ரைஸ்.. உயிரியல் பூங்காவில் இத்தனை வசதிகளா? சுற்றுலா பயணிகளுக்கு ஜாலி -
தொழுவத்தில் ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்த தேனி மாடுகள்.. நந்தகோபாலன் தம்பிரான் காளை தந்த நெகிழ்ச்சி -
தமிழ்நாட்டின் கடன் அவ்ளோ இருக்கு.. மகளிருக்கு ரூ.2,000 எப்படி கொடுக்க முடியும்? சமாளித்த எடப்பாடி! -
உலகின் பழமையான மொழி தமிழ் தான்.. சமஸ்கிருதம் அல்ல.. பாடலாசிரியர் ஜாவேத் அக்தரின் தரமான பதில்! -
Viruchigam Thai Matha Palan: விருச்சிகத்துக்கு பிரகாசமாக மாறப்போகும் வாழ்க்கை.. பொறுமை ரொம்ப அவசியம் -
மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுப்போம்.. அதிமுகவின் 5 தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட எடப்பாடி! -
பிரம்மாண்டமாக நடந்த பிக் பாஸ் ஜூலியின் கல்யாணம்.. தாலியை கவனிச்சீங்களா? குவியும் வாழ்த்து -
Rasi Palan: தை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications