இந்துக்களுக்கான ஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு பங்கு-சிவசேனா குற்றச்சாட்டு
தூத்துக்குடி: இந்து மக்களுக்கு வழங்கி வந்த 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக சிவனேசனா கட்சியின் மாநிலத் தலைவர் குமார ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவர் குமார ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பிற்படுத்தப்பட்ட இந்து மக்களுக்கு வழங்கி வந்த 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை கண்டிக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளோம். இதன் முதல் கட்டமாக தூத்துக்குடியில் வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று என்னுடைய தலைமையில் போராட்டம் நடைபெறும்.
அர்ச்சகர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான திருக்கோவில்களில் பக்தர்களிடம் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், திருக்கோவில்களில் வேதமறிந்த மடாதிபதிகளை மட்டுமே தலைவராக நியமிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications