ஒபாமாவின் இந்திய வருகைக்கு முன்பாக தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி?
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்ப் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடைபெறலாம் என்றும் உளவுத்துறை கூறுகிறது.
தீவிரவாதிகளுக்கிடையிலான பேச்சுக்களை இடைமறித்துக் கேட்டபோது இந்தத் தகவல் தெரிய வந்தது. ஸ்ரீநகரில் நேற்று 3 ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு வீட்டுக்குள் புகுந்து கொண்டனர். இவர்களுடன் பல மணி நேரம் போராடி சண்டையிட்ட பாதுகாப்புப் படையினர் அவர்களில் இருவரை சுட்டுக் கொன்றனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புப் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட தீவிரவாதியிடம் நடத்திய விசாரணை மற்றும் உளவுத் தகவல்கள் மூலம் ஒபாமா வருகையின்போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கும் சதிச் செயல் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் முடுக்கி விடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications