வெளிநாட்டு வேலை-புதுக்கோட்டையில் முகாம்: அனைத்து மாவட்டத்தினரும் பங்கேற்கலாம்
புதுக்கோட்டை: வெளிநாட்டு வேலையை விரும்புபவர்கள் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது.
தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பதிவு செய்த மருத்துவர்கள், என்ஜினியர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், உடலுழைப்பாளர்கள், எலக்ட்ரிஷியன்கள் என பலர் வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றனர்.
வெளிநாடு செல்ல விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், வெளிநாட்டு சிறப்பு பதிவு முகாம் அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு பதிவு முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பதிவு செய்யலாம்.
பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் நான்கு புகைப்படத்துடன் செல்ல வேண்டும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதிவு கட்டணமாக பட்டப் படிப்பு படித்தவர்கள் ரூ. 772-ம், மருத்துவர்கள் ரூ. 995-ம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரம் அறிய 99403 93617, 99529 40460, 94436 90272 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.