For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளம்பெண் குளிப்பதை செல்போனில் படமெடுத்த இளைஞர் கைது

Google Oneindia Tamil News

திருப்பூர்: இளம்பெண் குளிப்பதை செல்போனில் படமெடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மலர் (22). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 17-ம் தேதி காலை இவர் குளியறையில் குளித்துக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகம் மகன் செந்தில் (23) என்பவர் குளியலறையின் மேற்கூரை வழியாக மலர் குளிப்பதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மலர், இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மலரின் தந்தை செந்திலிடம் கேட்டபோது இருவருக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் மலரின் தந்தை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X