திருச்சி பாதிரியார் ராஜரத்தினம் மீது கட்டாயக் கருக்கலைப்பு வழக்கு-இதுவரை 3 வழக்குகள்
திருச்சி: திருச்சி பாதிரியாரும், செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வருமான ராஜரத்தினம் மீது 3வதாக கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக புதிதாக ஒரு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த கட்டாயக் கருக்கலைப்பை நடத்திய பெண் டாக்டர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. மேலும், பாதிரியாரால் சீரழிக்கப்பட்டதாக கூறப்படும் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரியை மிரட்டியதாக கூறப்படும் திண்டுக்கல் பாதிரியார், கருமாத்தூர் பாதிரியார், மதுரை பாதிரியார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவர் அக்டோபர் 11ம் தேதி திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிரியார் ராஜரத்தினம் மீது புகார் கொடுத்தார்.
அதில் தன்னை பாதிரியார் ராஜரத்தினம் பலமுறை கற்பழித்ததாகவுகம், கர்ப்பம் அடைந்ததால் கட்டாயமாக கருக்கலைப்பு செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து ராஜரத்தினம் தலைமறைவாகி விட்டார். அவர் மீது போலீஸார் கற்பழிப்பு, கொலை மிரட்டல் வழக்குகளைப் பதிவு செய்தனர். பிளாரன்ஸ் மேரிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கருக்கலைப்பு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கட்டாயப்படுத்தி அவருக்கு கருக்கலைப்பு செய்ததாக ராஜரத்தினம் மீது புதிய வழக்குப் போடப்பட்டுள்ளது.
கட்டாயமாக கருக்கலைப்பு செய்த திருச்சி தென்னூரைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் மீதும் வழக்குப் பதிவாகவுள்ளது. இவர் மேரிக்கு 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது பாதிரியார் தனது காரில் மேரியையும், அவரது சகோதரி மற்றும் தோழியை அழைத்து வந்து இந்த மருத்துவமனையில் விட்டுச் சென்றாராம்.
இது போக மேரி, ராஜரத்தினம் மீது புகார் கூறியபோது அவரை கடுமையாக மிரட்டியதாக கூறப்படும் மதுரை, கருமாத்தூர், திண்டுக்கல் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மூன்று பாதிரியார்கள் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.
இதுதவிர கருக்கலைப்பு நடந்தபோது அதற்கு சாட்சியாக இருந்த மேரியின் சகோதரி, தோழி ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவுள்ளனர்.












Click it and Unblock the Notifications