For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி-கைதான சீனியர் மாணவிகள் ஜாமீனில் விடுதலை

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ராகிங் கொடுமையால் நர்சிங் மாணவி தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கைதான சீனியர் மாணவிகள் மூவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த ராஜசேகர் மகள் முத்துசெல்வி(20). தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்த இவர் ராகிங் கொடுமையால் நேற்று முன்தினம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து ஏ.எஸ்.பி. சோனல் சந்திரா விசாரணை நடத்தி முத்து செல்வியை ராகிங் செய்ததாக 3-ம் ஆண்டு மாணவிகளான கனகவல்லி, ஜெயராதா மற்றும் ரேவதி ஆகியோரை கைது செய்தார். பின்னர் அவர்களை தூத்துக்குடி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மாயகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைத்தனர்.

நேற்று கைதான மாணவிகளின் பெற்றோர் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரணைக்கு ஏற்ற மாஜிஸ்திரேட் மூவருக்கும் ஜாமீன் வழங்கினார். இதையடுத்து போலீசார் மாணவிகளை பெற்றோருடன் செல்ல அனுமதித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X