ஆஸ்திரேலியாவில் பீர் பாட்டில்களால் குத்தப்பட்ட இந்தியர்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியர் ஒருவரை பீர் பாட்டில்களால் குத்தித் தாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மெல்போர்ன் நகரின் சேப்பல் தெருவில், ஒரு விரைவு உணவக அரங்கின் முன்பு 10 இளைஞர்கள் சேர்ந்து ஒரு இந்தியரை பீர் பாட்டில்களால் அடித்து குத்தி தாக்கியுள்ளனர்.
அவரது தலையில் காலி பீர் பாட்டிலை வைத்து அடித்துள்ளனர். இந்தியர்களுக்கு எதிராகவும் அவர்கள் அவதூறாகப் பேசியுள்ளனர்.
இலை தழைகளை தின்பவர்கள் என்றும் இந்தியர்களை கேலி பேசியுள்ளனர். காயமடைந்த அந்த இந்தியரை அவரது இரு நண்பர்கள் மிகுந்த சிரமப்பட்டு மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அந்த இந்தியர் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications