பிகார்: நாளை 2வது கட்ட தேர்தல்: 129 பேர் கிரிமினல்கள் போட்டி
பாட்னா: பிகார் சட்டசபைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டத் தேர்தல் நாளை நடக்கிறது.
இரண்டாவது கட்ட தேர்தலில் 503 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த வேட்பாளர்களில் 129 பேர் கிரிமினல் குற்றவாளிகள் ஆவர். இவர்கள் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் என்று பல்வேறு வழக்குகள் உள்ளன.
கிரிமினல் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். அந்த கட்சியின் 63 வேட்பாளர்களில் 40 பேர் கிரிமினல் வழக்குகளில் உள்ளன.
அதே போல ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியை சேர்ந்த 21 பேரும், பாஜக வேட்பாளர்களில் 24 பேரும் கிரிமினல் பேர்வழிகள் ஆவர்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டாவது கட்ட தேர்தலுக்கு 50 வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது. அதில் 33 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
முதல் கட்டத் தேர்தலில் 47 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது.