For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்களிடையே மோதல்-கடலூர் துறைமுகத்தில் 2 படகுகள் தீவைத்து எரிப்பு

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூரில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 படகுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் கடலூர், தேவனாம்பட்டினம் பகுதிகளில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் தேவனாம் பட்டினம் பகுதி மீனவர் சங்க நிர்வாரி மாரியப்பன் என்பவர் மஞ்சக்குப்பம் பகுதியில் வைத்து சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் வீரமணி என்பவரின் உறவினருக்குச் சொந்தமான 2 படகுகளை துறைமுகத்தில் வைத்து மாரியப்பன் ஆதரவாளர்கள் தீவைத்து எரித்தனர். இதில் இரு படகுகளும் சாம்பலாயின. அதில் இருந்த வலைகளும் எரிந்து போயின. இதன் சேத மதிப்பு ரூ. 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடலூர், தேவனம்பாட்டினம் பகுதிகளில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X